திருவனந்தபுரம், ஜுன் 22- கேரள மாநில கூட்டுறவு வங்கி வர லாற்றில் இதுவரை இல்லாத அளவில் நடப்பு ஆண்டில் ரூ.72.39 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.341.34 கோடி நட்டத்தில் இயங்கிய இந்த வங்கி இடது ஜன நாயக முன்னணி அரசின் நடவடிக்கை களால் தற்போது லாபத்தில் செயல் படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.
நூற்று நான்கு வருட கால பாரம்பரி யம் கொண்டது கேரள மாநில கூட்டு றவு வங்கி. இதுவரை இல்லாத அள வாக வங்கியின் மொத்த வரவு செலவு ரூ.15 432 கோடியாக உயர்ந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கட கம்பள்ளி சுரேந்திரன் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். ரூ.281.91 கோடி வங்கியின் செயல்பாட்டு லாபம். இது வங்கியின் ஆயுட்கால சாதனையாகும். 2001-2006 கால அள வில் வங்கியின் ஆட்சிமன்ற குழு அனு மதித்த முறைகேடான கடன்களைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதாரங்களை முழுமையாக களைந்து நட்டத்திலிருந்து இப்போது தான் லாபத்தை கண்டுள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.72.39 கோடி. வங்கியின் செயல்படா சொத்து கள் (மொத்த என்பிஏ) 3.16 சதவிகி தமாக குறைந்துள்ளது. நிகர சொத்து (நெட் என்பிஏ) 1.42 சதவிகிதம் மட்டு மேயாகும். திட்டமிடப்பட்ட தேசியமய மாக்கப்பட்ட வணிக வங்கிகள் இழப்பை நோக்கி செல்லும்போது மாநில கூட்டுறவு வங்கி இந்த சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் தெரி வித்தார்.
ஒட்டுமொத்த இழப்பை முழுமை யாக சீராக்க முடிந்ததன் மூலம் இந்தி யாவில் மிக உயர்ந்த லாபமும் மூல தன திறன் கொண்ட கூட்டுறவு வங்கி யாகவும் மாநில கூட்டுறவு வங்கி மாறி யுள்ளது. ரிசர்வ் வங்கி வழிகாட்டு தல்படி 9 சதவிகிதம் மூலதன திறன் தேவை. ஆனால் தற்போது மாநில கூட்டுறவு வங்கியின் மூலதன திறன் 22.54 சதவிகிதமாக உயர்ந்த நிலை யில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.8 945 கோடியாக வைப்பு நிதி உயர்ந்துள்ளது. 2016ல் ரூ.3 412 கோடி கடன் வழங்கிய மாநிலத்தில் இப்போது ரூ.6487 கோடி வழங்கப் பட்டுள்ளது. கேரள வங்கி உரு வாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள ஊக்கமே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் கூறினார். மாநில கூட்டு றவு வங்கி நிர்வாக இயக்குநர் ராணி ஜார்ஜ், கூட்டுறவு செயலர் மினி ஆன்றனி, கூட்டுறவு சங்க பதிவாளர் எஸ்.ஷாநவாஸ் ஆகியோர் செய்தி யாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.